பிரேசிலில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளம் – 24 பேர் பலி

 

பிரேசிலில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளம் – 24 பேர் பலி

பிரேசில் நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் சா பாலோ பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அந்தப் பகுதி வெள்ளம் மற்றும் இடிபாடுகளால் கடும் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ttn

இடிந்த வீடுகளின் கட்டிட குப்பைகளை அகற்றியும், சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு 24 பேர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.