பிரேக் பிடிக்காததால் சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து! கற்களை போட்டு நிறுத்திய பொதுமக்கள்!! 

 

பிரேக் பிடிக்காததால் சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து! கற்களை போட்டு நிறுத்திய பொதுமக்கள்!! 

திண்டுக்கல் அருகே அரசு பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய பேருந்தை பொதுமக்கள் கற்களை போட்டு நிறுத்திய சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. 

திண்டுக்கல் அருகே அரசு பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய பேருந்தை பொதுமக்கள் கற்களை போட்டு நிறுத்திய சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. 

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சிலுக்குவார் பட்டியை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் பிரேக்கை பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காமல் பேருந்து தாறுமாறாக ஓடியது. அப்போது தான் பிரேக் செயலிழந்தது ஓட்டுநருக்கு தெரியவந்துள்ளது. இதையறிந்த பயணிகள் கூச்சலிட்டனர். ஓட்டுநர் கடுமையாக போராடியும் பேருந்தை நிறுத்த முடியவில்லை.

இதைகண்ட பொதுமக்கள் சிலர் டயரின் குறுக்கே கற்களை போட்டு பேருந்தை நிறுத்தினர்.  பிரேக் செயலிழந்த அரசு பேருந்து திண்டுக்கல் பணிமனையில் நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக மற்றொரு பேருந்து இயக்கப்படுகிறது. பழுதடைந்த பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.