பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்

 

பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது.

சென்னை: ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது.

ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.50 மதிப்புள்ள கூப்பன்களை அந்த ரீசார்ஜ் மதிப்புக்கு ஏற்ற வகையில் அளிக்கிறது. அதேபோன்ற சலுகையை தற்போது ஏர்டெல் நிறுவனமும் கையில் எடுத்துள்ளது. அதாவது, ரூ.399 அளவுக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு அந்நிறுவனம் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. பயனர்கள் செலுத்தும் தொகையை அப்படியே கேஷ்பேக் வடிவில் திரும்ப பெற முடியும். ஏர்டெல் வழங்கும் 100 சதவிகிதம் கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள எட்டு வவுச்சர்களாக வழங்கப்படுகின்றது.

இந்த வவுச்சர்களை பயனர்கள் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது ஒவ்வொன்றாக பயன்படுத்த முடியும். அப்படியெனில், ஒரு முறை ரீசார்ஜ் செய்ய ரூ.50 மதிப்புள்ள ஒரு வவுச்சரையே பயன்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு முறை ரூ.399 ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.50 மட்டும் குறைக்கப்படும். கேஷ்பேக் வவுச்சர்களை எட்டு முறை பயன்படுத்த முடியும் என்பதால் பயனர்கள் மொத்தம் ரூ.400 கேஷ்பேக் பெற முடியும். ஏர்டெல் அறிவித்திருக்கும் சலுகை மார்ச் 31, 2020 வரை வழங்கப்படுகிறது.