‘பிரியாணி விக்கிற மாதிரி பெண்ணை விற்றனர்’-20 தை தூக்கிக்கொண்டு போன 60 …

 

‘பிரியாணி விக்கிற மாதிரி பெண்ணை விற்றனர்’-20 தை தூக்கிக்கொண்டு போன 60 …

ஹைதராபாத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவத்தில்,ஒரு பஹ்ரைன் நாட்டை சேர்ந்த வெளிநாட்டவர் 25 வயதான ஒரு பெண்ணை உள்ளூர் தம்பதிகளிடமிருந்து விலைக்கு வாங்கி ‘ பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 60 வயதான இப்ராஹிம் சுக்ரல்லா முகமது பைராமி என்ற அந்த நபர்,பஹரைனில் ஒய்வு பெற்ற செவிலியர்.

பஹ்ரைனிலிருந்து வந்த ஒரு அறுபது வயது முதியவரிடம் ஒரு இளம் பெண்ணை விலைக்கு விற்ற கொடுமை நடந்துள்ளது .
ஹைதராபாத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவத்தில்,ஒரு பஹ்ரைன் நாட்டை சேர்ந்த வெளிநாட்டவர் 25 வயதான ஒரு பெண்ணை உள்ளூர் தம்பதிகளிடமிருந்து விலைக்கு வாங்கி ‘ பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 60 வயதான இப்ராஹிம் சுக்ரல்லா முகமது பைராமி என்ற அந்த நபர்,பஹரைனில் ஒய்வு பெற்ற செவிலியர்.அவருக்கு  இந்த வயதில் ஒரு இளம்பெண் தேவைப்பட்டது . 
அதனால் ஹைதராபாத்தில்  சலாம் பின் சயீத் என்ற நபரைதொடர்பு கொண்டு இந்த இளம்  பெண் தேவைப்படும் விஷயத்தை கூறினார்.அவர் அதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறியதால்  2019 அக்டோபரில் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

60 old man

அவர் வந்ததும்  சந்திரயங்குட்டாவில் உள்ள சலாலா,பார்காஸ் குடியிருப்பிலிருக்கும் சபர் மற்றும் அவரது மனைவி சமீனா ஆகியோரின் இளைய மகளை பஹ்ரைன் நபரிடம் விலைக்கு பேசி முடித்தார்..

அந்த பெண்ணை விலைக்கு வாங்கிய பஹ்ரைன் நபர் அந்த பெண்ணை சிகரெட்டால் சுட்டும் பாலியல் பலாத்காரமும் செய்து கொடுமை படுத்தியுள்ளார்.இதனால் அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து அவரது சகோதரியிடம் கூற ,அவர் போலீசில் புகார் தந்தார்.போலீசார் விசாரித்து பஹ்ரைன் நபர் மற்றும் ஒரு தரகர் ஆகியோரை கைது செய்தனர்.பெண்ணை விற்ற சபர் மற்றும் அவரது மனைவி சமீனா ஆகியோரை தேடி வருகின்றனர் .