பிரியாணி செய்து தர மறுத்த மனைவியை எரித்த கணவர்!

 

பிரியாணி செய்து தர மறுத்த மனைவியை எரித்த கணவர்!

திருவாரூரில் பிரியாணி செய்து தர மறுத்த மனைவியை கணவர் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூரில் பிரியாணி செய்து தர மறுத்த மனைவியை கணவர் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கூத்தாநல்லூர் அருகேயுள்ள கொத்தங்குடியைச் சேர்ந்தவர் சித்திரைவேலு- கற்பகம். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளான நிலையில், 8 வயதில் மதுசூதனன் என்ற குழந்தை இருக்கிறான். குடிபோதைக்கு அடிமையான சித்திரைவேலு, தினமும் மது அருந்திவிட்டு, மனைவிடம் சண்டைபோடுவதுண்டு. அருகிலிருந்த தங்கையின் வீட்டிற்கு சென்ற சித்திரைவேலு, அவரது வீட்டில் அனைவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

தீ 

உடனே தன்னுடைய வீட்டிற்கு வந்த சித்திரைவேலு, மனைவி கற்பகத்திடம் பிரியாணி செய்துதருமாறு கேட்டுள்ளார். இல்லையென்றால் தங்கையின் வீட்டிற்கு சென்று வாங்கிவருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கற்பகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சித்திரைவேலு, மனைவியை கீழே தள்ளவிட்டு மண்ணெண்ணய் ஊற்றி எரித்துள்ளார். கற்பகத்தின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு கற்பகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சித்திரைவேலுவை கைது செய்த கூத்தாநல்லூர் காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.