பிரியாணி சாப்பிட்டா எப்டி மச்சான் 6 பேக் வைக்கறது?: கலகலப்பாக பேசிய சிம்பு!

 

பிரியாணி சாப்பிட்டா எப்டி மச்சான் 6 பேக் வைக்கறது?: கலகலப்பாக பேசிய சிம்பு!

நடிகர் சிம்பு 6 பேக் வைப்பது குறித்து தனது நண்பர் நடிகர் மகத்திடம் பேசும் லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் சிம்பு 6 பேக் வைப்பது குறித்து தனது நண்பர் நடிகர் மகத்திடம் பேசும் லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், தனது நண்பரும், நடிகருமான மகத்துடன் ரசிகர்களிடம்  சிம்பு பேசும் லைவ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘எனக்கா ரெட் கார்டு? எடுத்து பாரு என் ரெக்கார்டு’ என்ற சிங்கிள் டிராக் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவித்தார். இந்த வரிகளை தான் எழுதவில்லை என்று கூறிய சிம்பு, ஆனால் இந்த பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி நன்றாக இசையமைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மச்சான் இந்த 6 பேக் எப்படி டா வைக்கறது என மகத்திடம் கேட்கிறார். உன்னால் முடியும் மச்சான் என்று மகத்தும் மோட்டிவேட் செய்கிறார். நல்ல பிரியாணி சாப்பிட்டுகிட்டே இருந்தா எப்படி மச்சான் 6 பேக் வைக்க முடியும். பட் கண்டிப்பா உங்களுக்காக அதும் நான் செய்றேன் சீக்கரமே என்று ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் 6 பேக்கை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.