“பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க சார்” : பாஜகவினருக்கு பயந்து போலீசில் புகார் கொடுத்த கடை உரிமையாளர்கள்!

 

“பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க சார்” : பாஜகவினருக்கு  பயந்து போலீசில் புகார் கொடுத்த கடை உரிமையாளர்கள்!

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நாளை பேரணி  நடைபெறவுள்ளது. 

பாஜக பேரணியின்போது பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்புக்கோரி  கடை உரிமையாளர்கள்  சார்பில்  போலீசில் மனு அளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ttn

நாடுமுழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாகவும் வெடித்துள்ளது. அந்த வகையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நாளை பேரணி  நடைபெறவுள்ளது. 

ttn

இந்நிலையில் திருப்பூர் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்  அளிக்கப்பட்டுள்ள மனுவில், பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டாக்கள் திருடப்பட்டது. தற்போது திருப்பூரில் இஸ்லாமியர்கள் பகுதியில் பேரணி நடைபெற இருப்பதால் பிரியாணி அண்டாகளுக்கு பாதுகாப்பு தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.