பிரியங்கா நிக் ஜோனஸ் திருமணத்தில் மிருக வதை: பீட்டா கண்டனம்!
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமணத்தில் விலங்குகளை துன்புறுத்தியதாக பீட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கதோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் ஆடம்பரமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் பிரியங்கா நிக் திருமணத்தில் யானைகள், குதிரைகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பீட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்களது திருமணத்தில் யானைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன, குதிரைகள் சவுக்குகளால் துன்புறுத்தப்பட்டன. திருமண சடங்குகளில் குதிரை, யானைகள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. வாழ்த்துக்கள் , ஆனால் விலங்குகளுக்கு அன்றைய தினம் மகிழ்ச்சியானதாக இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
Dear @priyankachopra and @nickjonas. Eles 4 weddings live n chains & horses r controlled w whips, spiked bits. Ppl r rejecting ele rides: https://t.co/Gea5jvP6LP & having horse-free weddings. Congrats, but we regret it was not a happy day for animals. pic.twitter.com/p9FFeJ969B
— PETA India ❤️❤️ (@PetaIndia) December 3, 2018
மேலும், திருமணம் முடிந்ததும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்ததால் புகை மூட்டமாக காணப்பட்டது. பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளா நிலையில், பிரியங்கா திருமணத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டு காற்று மாசு ஏற்பட்டதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.