பிரார்த்தனை செய்ய கோவிலுக்குச் சென்ற பெண்…. சிவன் கோவிலில் வைத்து பெண்ணை சீரழிக்க முயன்ற கும்பல்

 

பிரார்த்தனை செய்ய கோவிலுக்குச் சென்ற பெண்…. சிவன் கோவிலில் வைத்து பெண்ணை சீரழிக்க முயன்ற கும்பல்

கெரேடகடா கிராமத்தில் உள்ள ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நோய் குணமாக பிரார்த்தனை செய்வதற்காக புதன்கிழமை அன்று இரவு அருகிலிருந்த சிவன் கோவிலுக்குச் சென்றுள்ளார். ஒரு பெண் கோவிலில் தனியாக இருந்ததைப் பார்த்த மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதித்த பெண்ணை கோவிலுக்குள் வைத்து ஒரு கும்பல் கற்பழிக்க முயன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் கற்பழிக்க முயன்றதற்காக இரண்டு குற்றவாளிகளை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். 

கெரேடகடா கிராமத்தில் உள்ள ஒரு பெண் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நோய் குணமாக பிரார்த்தனை செய்வதற்காக புதன்கிழமை அன்று இரவு அருகிலிருந்த சிவன் கோவிலுக்குச் சென்றுள்ளார். ஒரு பெண் கோவிலில் தனியாக இருந்ததைப் பார்த்த மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். உடனே அந்த கூச்சலிட்டதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக ராஜ்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தபன் குமார் நாயக் தெரிவித்தார். 

பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இருவரை கைது செய்துவிட்டதாகவும், ஒருவர் தலைமறைவாகி விட்டதாகவும் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.