பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் கேரளாவில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பல்

 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் கேரளாவில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பல்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் கேரளாவில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினர்.

கொச்சி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் கேரளாவில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினர்.

இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 112 பேர் கேரளாவில் சிக்கியிருந்தனர். அவர்கள் சுற்றுலாவுக்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் இந்தியா வந்திருந்தனர். வெளிநாட்டினர் என்பதால் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேரும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை கொச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் அவர்கள் அனைவரும் பாரீஸ் புறப்பட்டுச் சென்றனர். விமான நிலைய விதிகளின்படி அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களது உடமைப் பொருட்களுக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.