பிரம்பு முறியும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. கருவிழி கிழிந்து கண் பார்வையை இழந்த மாணவி.. அதிர்ச்சி சம்பவம்!

 

பிரம்பு முறியும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. கருவிழி கிழிந்து கண் பார்வையை இழந்த மாணவி.. அதிர்ச்சி சம்பவம்!

பல மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு வராததால் பிரம்பை எடுத்து எல்லா மாணவர்களையும் அடித்துள்ளார்.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்று எவ்வளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு ஆசிரியர், மாணவரைப் பிறப்புறுப்பில் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

tttn

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஆதிநாராயணன், 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, பல மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு வராததால் பிரம்பை எடுத்து எல்லா மாணவர்களையும் அடித்துள்ளார்.

ttn

அதே போல முத்தரசி என்னும் மாணவியையும் அடித்துள்ளார். அப்போது, அவர் கையிலிருந்த பிரம்பு முறிந்து மாணவி முத்தரசி கண்ணின் மீது விழுந்துள்ளது. இதனால் வலியால் துடித்த முத்தரசியை ஆசிரியர்கள், பெற்றோருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் கருவிழி கிழிந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கண் பார்வை திரும்புவது கடினம் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

ttn

இது குறித்து முத்தரசியின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர் அறுவை சிகிச்சை செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முத்தரசிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்ணிலிருந்த பிசிறு நீக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்  ஆதிநாராயணனின் இந்த செயலால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.