பிரமாண்ட இயக்குனரிடம் வாலண்ட்ரியாகப் போய் வாங்கிக்கட்டிக்கொண்ட வைகைப்புயல்..!?

 

பிரமாண்ட இயக்குனரிடம் வாலண்ட்ரியாகப் போய் வாங்கிக்கட்டிக்கொண்ட வைகைப்புயல்..!?

பிரம்மாண்ட இயக்குனரின் பார்ட் டூ படத்துக்கான பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்கும் போதே,இயக்குனர் ஆபிஸில் இன்னொரு பஞ்சாயத்து போயிக்கிட்டிருக்கு! இது,அவர் தயாரிப்பு சம்பந்தமான பஞ்சாயத்து.

பிரம்மாண்ட இயக்குனரின் பார்ட் டூ படத்துக்கான பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்கும் போதே,இயக்குனர் ஆபிஸில் இன்னொரு பஞ்சாயத்து போயிக்கிட்டிருக்கு! இது,அவர் தயாரிப்பு சம்பந்தமான பஞ்சாயத்து.

shooting

அவர் தயாரித்த ஒரு படத்தை பற்றிய இப்போ சொல்லியாகணும்… வைகைப்புயல் ஏற்கனவே நடிச்சு ஹிட்டடிச்ச படத்தோட இரண்டாம் பாகம் படத்தோட விஷயம் இது.

இந்த படத்தில் நடிக்கும் போது வைகைப்புயல் வம்பு வளர்த்ததால் தயாரிப்பாளர் சங்கம் வரைக்கும் புகார் போய்’ Red card’ போட்டதெல்லாம் பச்ச மண்ணுக்குக்கூட தெரியும்…ரெண்டு பக்கமும் முறுக்கிக்கிட்டு முகம் கொடுக்காமாவே ரொம்ப நாளா இருக்கிறார்கள். 

ரொம்ப வருஷமா படங்களே இல்லாமல்,வீட்டுலயும் ஆபிஸ்லயும் சும்மாவே உட்கார்ந்து இருக்கிறது, சொந்தக் காசுல தண்ணி அடிக்க முடியாம
காம்ப்ரமைஸ்க்கு போலாம்னு போயிருக்கார்.வைகையையும் அவர் கூட வந்த நபரையும் பார்த்தவுடனே பிரமாண்ட இயக்குனர் டென்ஷனின் உச்சத்துக்கே போயிருக்கிறார்.

உடன் போன நபர்,காமெடி நடிகரின் பர்ஷனல் காஸ்ட்யூமர்.அவரால்தான் ஏற்கனவே பஞ்சாயத்து ஆகி,படமே அந்தரத்தில் நிக்குது! அவரை பஞ்சாயத்துக்கு கூட்டிக்கிட்டு போகலாமா?! சரி,அதுதான் பரவால்ல… வாலண்ட்ரியா வண்டில ஏறிப்போய் பஞ்சாயத்து பேசப் போனது வைகை,நடந்தது நடந்து போச்சு சபையைக் கூட்டுங்க ஷூட்டிங் போவம்னு சொல்லியிருந்தா பரவால்ல…டைரக்டர மட்டும் தூக்கிருங்க…நா படத்த முடிச்சு கொடுத்துறேன்னு சொன்னாராம்! மறுபடியும் பாட்டிலும் கையுமா உக்காந்திருக்கிறார் வைகைப்புயல்!