பிரபாஸ் படத்திற்குப் பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்!

 

பிரபாஸ் படத்திற்குப் பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்!

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, இந்தி என  3 மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தின் ரூ.300 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. பாகு பலிக்குப் படத்திற்குப் பின்னர் பிரபாஸ் படம் வெளியாகுவதால் ஆந்திரா மற்றும் தெலுங்கில் அவரது ரசிகர்கள்  பேனர்கள், போஸ்டர்கள் என்று படத்தை வரவேற்றனர். 

sahoo

இந்த நிலையில் தெலுங்கானா பகுதியில் ஒரு தியேட்டர் ஒன்றில், நேற்று இரவு பிரபாஸ் ரசிகர்கள் மிக பேனர் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தியேட்டர் முன் பகுதியிலிருந்த மிக உயரமான கட் அவுட் ஒன்றுக்கு மாலை அணிவிக்கும் பொது மின்சார வயர் ஒன்றில் தவறுதலாகக் கைவைத்தார். உடனே ஷாக் அடிக்க கட் அவுட்டின் உச்சியிலிருந்து விழுந்த அவர் பலியானார்.