பிரபாஸின் சாஹோ படம் வெளியாவதில் சிக்கல்? பின்னணி என்ன?

 

பிரபாஸின் சாஹோ படம் வெளியாவதில் சிக்கல்? பின்னணி என்ன?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பிரபாஸின் சாஹோ படம் வெளியாவதில் சிக்கல்? பின்னணி என்ன?

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என  3 மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தின் ரூ.300 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது. ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான அந்த ட்ரைலரை காணும் பொது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற செய்துள்ளது. 

இந்த நிலையில்  சாஹோ படம் வரும் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படம் வெளியாக இன்னும் 8 நாட்களே இருப்பதால் பிரபாஸ் ரசிகர்கள் அவருக்கு கட் அவுட் மட்டும்  பேனர் வைத்து அமர்க்கள படுத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் படத்தின் சென்சார் வேலை முடியாத காரணத்தினால் படம் சொன்ன தேதியில் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள், ‘ஒரு சாதாரண படம் வெளியாகிறது என்றாலே மிகவும் கவனமாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள்.அப்படி இருக்கும் பொது இது போன்று ஒரு மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கலாமோ? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.