பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் பொன்னார் அதிரடி!

 

பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் பொன்னார் அதிரடி!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வந்தால் மகிழ்ச்சி என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வந்தால் மகிழ்ச்சி என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அதை உறுதிப் படுத்தும் வகையில் பிரபாகரன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட புகைப்படமும் அப்போதே வெளியானது. ஆனால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் இன்று வரை ஓயவில்லை.

திராவிட இயக்க உணர்வாளரும், ஈழ ஆதரவாளருமான வைகோ, பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாக சமீபத்தைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், “தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார். நான் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவிக்கிறேன், தமிழின விடுதலைக்காகப் போராட பிரபாகரன் மீண்டும் வருவார்” என தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

prabhakaran ltte

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை-அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மூத்த தலைவர் பழ. நெடுமாறன் மிகுந்த மரியாதைக்குரியவர். அவர் கூறுவதைப்போல் பிரபாகரன் மீண்டும் வந்தால் தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியடையும்” என தேரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணன், அந்நிய நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருக்கும் பிரபாகரன் உயிருடன் வந்தால் மகிழ்ச்சி என தெரிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.