பிரபாகரன் இருந்த காலத்தில்கூட மக்கள் இப்படி அஞ்சி நடுங்கவில்லை: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பேச்சு!

 

பிரபாகரன் இருந்த காலத்தில்கூட மக்கள் இப்படி அஞ்சி நடுங்கவில்லை:  இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பேச்சு!

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இலங்கை: பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்ததாக  இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

rajapaksa

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார் ராஜபக்சே.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இலங்கையில்  கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல் போன்றவற்றிற்கு மக்கள் அச்சமின்றி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த போது  கூட மக்கள் இப்படி அஞ்சி நடுங்கவில்லை’ என்றார்.

prabhakaran

தொடர்ந்து பேசியுள்ள அவர், அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர தற்போதுள்ள அரசாங்கத்திற்கு உரிமை இல்லை. அது இனிவரும் காலத்தில் எங்கள் தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்திற்கே உள்ளது. வரும் எதிர்கால சந்ததியினருக்காகக் கண்டிப்பாக இந்த அரசாங்கத்தை அகற்றுவோம்’ என்று கூறியுள்ளார்.