பிரபல ரௌடியை திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ்: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

 

பிரபல ரௌடியை திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ்: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

பெண் காவலர் ஒருவர் ரௌடி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரௌடியை திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ்: அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

நொய்டா: பெண் காவலர் ஒருவர் ரௌடி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cop

கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர்  பாயல்.  பெண் காவலராக சுராஜ்பூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தபோது  நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் தரசனா என்ற குற்றவாளியைச் சந்தித்துள்ளார். ராகுலை பார்த்த நொடி பொழுதிலேயே காதல் வயப்பட்ட பாயல் இது குறித்து வெளியில் தெரியாமல் ரகசியமாக அவரை காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் ராகுலும், பாயலும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படமானது சமூகவலைதளங்களில்  வைரலானது. இதைக்கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள போலீசார், ‘இந்தத் திருமணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா என்று தெரியவில்லை. உண்மையாக இருப்பின் ராகுல் செய்த குற்றங்களில் பாயலுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரிக்கப்படும்’ என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.