பிரபல மலையாள நடிகர் மீது மீடு புகார் கொடுத்த ரேவதி சம்பத்! 

 

பிரபல மலையாள நடிகர் மீது மீடு புகார் கொடுத்த ரேவதி சம்பத்! 

பிரபல மலையாள நடிகர் சித்திக் தன்னிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக நடிகை ரேவதி சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை: பிரபல மலையாள நடிகர் சித்திக் தன்னிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக நடிகை ரேவதி சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த ஆண்டு தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளில் மீடு என்ற புகார் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அதனின் தாக்கம் சற்று அடங்கி இருந்த நிலையில், மலையாள நடிகை ரேவதி சம்பத், பிரபல நடிகர் சித்திக் மீது குற்றம் சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறியதாவது’ கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரிவியூ தியேட்டரில் நடிகர் சித்திக்குடன் ‘சுகமாயிருக்கட்டே’ என்ற படம் பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது என்னிடம் அத்துமீறி, தகாத வார்த்தையால் பேச ஆரம்பித்தார். அப்போ எனக்கு வயது வெறும் 21தான். அவர் மகள் வயதில் இருக்கும் என்னிடம் இப்படி நடந்து கொண்டதால் பெரும் அதிர்ச்சியடைந்தேன். 

இந்த நிலையில் இப்போது முகநூலில் திடீரென பதிவு செய்ததற்கான காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்திக், நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக பேசுவதற்காக, மலையாள நடிகைகள் ஆரம்பித்த, சினிமா நல அமைப்பை விமர்சித்து பேசினார். அந்த விடியோவை பார்த்த பின்பு தான் ஒரு மனிதனால் எப்படி இப்படி பேச முடிகிறது என்று கோபம் எழுத்து. அதனால் இந்த பதிவுடன் அந்த இணைந்து பதிவு வெளியிட்டுள்ளேன் என்றார்.