பிரபல புதுச்சேரி ரவுடி ஜெகன் வெட்டி கொலை: பின்னணி என்ன?

 

பிரபல புதுச்சேரி ரவுடி ஜெகன் வெட்டி கொலை: பின்னணி என்ன?

கண்டமங்கலம் : பிரபல  புதுச்சேரி ரவுடி ஜெகன் என்பவரை  மர்மகும்பல்  ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி வில்லியனூரை  அடுத்த பொறையூரை சேர்ந்தவர்  பிரபல ரவுடி ஜெகன். இவர் மீது 2014 ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கு உட்பட சுமார் 18 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் இவர் நேற்றிரவு கண்டமங்கலம் பகுதியில் மர்ம நபர்களால் ஜெகனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளார்.  இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே ஜெகனை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வில்லியனூர் போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.