பிரபல பாடலாசிரியருக்கு தங்க மோதிரம் பரிசளித்த லாரன்ஸ்: காரணம் தெரியுமா?
நடிகர் ராகவா லாரன்ஸ் கஞ்சனா படத்தின் பாடலாசிரியர் விவேகாவுக்கு தங்கமோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் கஞ்சனா படத்தின் பாடலாசிரியர் விவேகாவுக்கு தங்கமோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
நடிகரும் இயக்குருமான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் ‘காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரலில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
காஞ்சனா, காஞ்சனா-2 படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து திரு @offl_Lawrence அவர்களுக்கு
காஞ்சனா-3 படத்திலும் பாடல் எழுதுவது பெருமகிழ்ச்சி! வரிகளை வியந்த அவர் என் விரலுக்குத் தங்கமோதிரம் அணிவித்து வாழ்த்திய தருணம்…#kanchana3 @SunTV pic.twitter.com/5pSWnZmUEo— Viveka Lyricist (@Viveka_Lyrics) December 10, 2018
இந்நிலையில் ‘காஞ்சனா’ மற்றும் ‘காஞ்சனா 2’ படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் விவேகா ‘காஞ்சனா 3’ படத்திலும் பாடல் எழுதியிருப்பதாகவும், அவருடைய பாடல் வரிகளைப் பார்த்து வியந்த ராகவா லாரன்ஸ் அவருக்கு தங்கமோதிரம் பரிசளித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை விவேகா தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.