பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸின் சகோதரர் கடன் தொல்லையால் தற்கொலை…..

 

பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸின் சகோதரர் கடன் தொல்லையால் தற்கொலை…..

கேரளாவில் பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸின் சகோதரர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரையுலகில் பிரபல பாடகராக விளங்கி வருபவர் கே.ஜே. யேசுதாஸ். இவரது சகோதரர் ஜஸ்டின். அவர் கடந்த 2 ஆண்டுகளாக கேரளாவின் கக்கநாட்டில் அதானி பகுதியில் உள்ள சென்ட்.அந்தோணி சர்ச் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜஸ்டின் குடும்ப செலவுகளுக்காக ஏராளமாக கடன் வாங்கி உள்ளார். ஆனால் அவற்றை திருப்பி கொடுக்க முடியவில்லை.

கே.ஜே. யேசுதாஸ்

இந்நிலையில், வல்லபடம் முனையம் அருகே உள்ள காயலில் ஒரு சடலம் மிதப்பதாக முலவுகாட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதலில் அந்த சடலத்தை அடையாள தெரியாத நபர் எனதான் போலீசார் குறிப்பிட்டு இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை போலீசார் தற்கொலை என கருதுகின்றனர்.
பலியான ஜஸ்டினின் உறவினர் கடந்த புதன்கிழமையன்று திரிக்காக்காரா காவல் நிலையத்தில் ஜஸ்டினை காணவில்லை புகார் கொடுத்து இருந்தார். இதனால் சடலத்தை கைப்பற்றிய முலவுகாட் போலீசாரிடமிருந்து இறந்த நபரின் அடையாளங்களை திரிக்காக்காரா போலீசார் பெற்றனர். அதனுடன் ஜஸ்டினின் அடையாளங்கள் ஒத்து போனதையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கே.ஜே. ஜஸ்டின்

ஜஸ்டின் மனைவியின் சகோதரர்கள் சடலத்தை பார்த்து அது ஜஸ்டின்தான் என்பதை உறுதி செய்தனர். திரிக்காக்காரா நகராட்சியின் அதானி வார்டு உறுப்பினர் எம்.டி.ஓமனா கூறுகையில், ஜஸ்டின் கடந்த 2 ஆண்டுகளாக இங்குதான் வசித்து வந்தார். இறந்த ஜஸ்டின் கே.ஜே. யேசுதாஸின் சகோதரர் என்ற தகவல் செய்திகள் வெளியான பிறகே எனக்கு தெரியும். பல முறை அவரை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு தெரியாது என தெரிவித்தார்.