பிரபல நீச்சல் வீரர் விபத்தில் பலி! முன்விரோதம் காரணமா? 

 

பிரபல நீச்சல் வீரர் விபத்தில் பலி! முன்விரோதம் காரணமா? 

சென்னையில் பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஷெனாய்நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகன் நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன். தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் என்ஜினியர் பணிபுரிந்து வரும் இவர், 

கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினரை பார்க்க இரு சக்கரவாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது அரும்பாக்கம் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 பாலகிருஷ்ணன் கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேர்வாகியிருந்தார்.  காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கக்கூடாது என அப்போது அவரை சிலர் தாக்கினர். அந்த முன்விரோதத்தை மனதில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்