பிரபல நாடக கலைஞர், நடிகரும் எழுத்தாளருமான கிரேஸி மோகன் காலமானார்

 

பிரபல நாடக கலைஞர், நடிகரும் எழுத்தாளருமான கிரேஸி மோகன் காலமானார்

நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், இன்று பிற்பகல் 2 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். முன்னதாக நெஞ்சுவலி காரணமாக சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரேஸி மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

crazymohan

நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், இன்று பிற்பகல் 2 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். முன்னதாக நெஞ்சுவலி காரணமாக சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரேஸி மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது இதயத்தில் ஊசி செலுத்தி, மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் கிரேஸி மோகன் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் வசனங்கள் எழுதிய கிரேஸி மோகன், பல்வேறு மேடை நாடகங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார்.