பிரபல நட்சத்திர விடுதியில் சரளமாக புழங்கும் ட்ரக்ஸ்: பிரபல தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் குற்றச்சாட்டு!

 

பிரபல நட்சத்திர விடுதியில் சரளமாக புழங்கும் ட்ரக்ஸ்: பிரபல தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் குற்றச்சாட்டு!

நட்சத்திர ஓட்டலின் மதுபான விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளை நுகர்வதற்குக் கட்டாயப்படுத்தி போதை கும்பல் தாக்கியதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ள புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னை: நட்சத்திர ஓட்டலின் மதுபான விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளை நுகர்வதற்குக் கட்டாயப்படுத்தி போதை கும்பல் தாக்கியதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ள புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது.

கோவையை பூர்வீகமாகக் கொண்ட கவுசல்யா, சென்னை வடபழனியில் தங்கி நிகழ்ச்சி மேலாண்மை பணி மேற்கொண்டு வந்துள்ளார். முன்னதாக இவர் சன்டிவியில் ஓராண்டு பணியாற்றி வந்துள்ளார். இவர் நண்பர்களுடன் அடிக்கடி பப்புக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது  பெரம்பூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். அப்போது கவுசல்யாவை பெரோஸ்கான் போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையாக்க முயன்றதால் அவரை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.

hospital

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல  நட்சத்திர ஓட்டலில்,  கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தனது நண்பருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த கவுசல்யாவை அங்கு வந்த பெரோஸ்கான் தாக்கியதாகக் கூறப்படுகின்றது. இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

lover ttn

இதையடுத்து காவல்துறைக்குப் புகார் ஏதும் தெரிவிக்காமல் ஓட்டல் நிர்வாகம் ரகசியமாக அவர்களை சமரசம் செய்து வெளியேற்றி உள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த கவுசல்யா என்ற பெண் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதையடுத்து காவல்துறையினர் கவுசல்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, நட்சத்திர ஓட்டலில் அரசால் தடை செய்யப்பட்ட கொக்கைன், கெராயின் போன்ற போதை பொருள் எளிதாக கிடைக்கிறது. அந்த போதை பொருட்களை உபயோகிக்கத் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மறுத்ததால் போதை பொருள் விற்கும் நபர் தன்னை தாக்கியதாகவும் கவுசல்யா குற்றஞ்சாட்டினார்.

sun tv

ஆனால் தேனாம்பேட்டை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. இது குறித்து கருத்து  தெரிவித்த  நட்சத்திர ஓட்டலின் பாதுகாப்பு அதிகாரி கார்த்திக், ‘இது முன்னாள் காதலனுக்கும், காதலிக்கும் இடையே உள்ள சாதாரண பிரச்சனை. சிலரின் தூண்டுதலின் பேரில் பெரிதாக்கப்படுகிறது. இருவரும் சண்டையிட்ட சிசிடிவி காட்சிகள் காவல்துறையில் ஒப்படைத்துள்ளோம்’ என்றார். 

எது எப்படியோ, சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும்  போதை பொருள் விற்கும் நபர்களின் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.