பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

 

பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

3-டியில் உருவான காமசூத்ரா படத்தில் நடித்த நடிகை சாயிரா கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மும்பை:  3-டியில் உருவான காமசூத்ரா படத்தில் நடித்த நடிகை சாயிரா கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இயக்குநர் ரூபேஷ் பவுல் இயக்கத்தில் 3டியில் உருவான, ‘காமசூத்ரா’ படத்தில் நடிக்க முதலில் நடிகை ஷெர்லின் சோப்ரா ஒப்புக்கொண்டார். சில காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் பல்வேறு பிரச்னைகளால் அந்தப் படம் ட்ராப் ஆனது. இதையடுத்து 2013-ம் ஆண்டு இப்படத்தில்  நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு பதிலாக நடிகை சாயிரா கான் நடித்திருந்தார். 

saira

இந்நிலையில் சாயிரா கான் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ‘காமசூத்ரா’ இயக்குநர் ரூபேஷ் பவுல், சாயிரா கான் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு திறமையான நடிகை. இருப்பினும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மரண செய்தியை கூட ஊடகங்கள் தெரிவிக்கவில்லை.  மரணத்திலாவது அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த சாயிராவை காமசூத்ரா படத்தில் நடிக்க சம்மதம் சொல்ல வைப்பது  சவாலாக இருந்தது. அவரைத் தவிர வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்க முடியாது’ என்றார். 

saira

 சாயிரா கானின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதையடுத்து வாசிக்க: ஓட்டு பூத்தில் பாட்டியிடம் அடி வாங்கிய விஜய்… தலையில் தாக்கப்பட்ட அஜித்… அதிரவைக்கும்  வீடியோ..!