பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!! 

 

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!! 

தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்த பழம் பெரும் நடிகை கீதாஞ்சலி இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் எம்.ஜி.ஆரின் ஆசை முகம், சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்த பழம் பெரும் நடிகை கீதாஞ்சலி இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் எம்.ஜி.ஆரின் ஆசை முகம், சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கீதாஞ்சலி

ஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பிலிம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். மறைந்த கீதாஞ்சலியின் கணவர் ராமகிருஷ்ணாவும் பிரபல நடிகர் ஆவார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மறைந்த கீதாஞ்சலிக்கு அதித் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் உள்ளார். 

கீதாஞ்சலியின் மறைவு தமிழ், தெலுங்கு சினிமா திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.