பிரபல நடிகையைப் பார்த்து கண் தானம் செய்த ஆண்ட்ரியா!

 

பிரபல நடிகையைப்  பார்த்து கண் தானம் செய்த ஆண்ட்ரியா!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயைப் பார்த்துத் தான் நானும் கண்தானம் செய்தேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். 

சென்னை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயைப் பார்த்துத் தான் நானும் கண்தானம் செய்தேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். 

நடிகை ஆண்ட்ரியா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வருடத்திற்கு ஒரு சில படங்களை மட்டுமே வந்தாலும் அதில் தனது கதாபாத்திரத்தின் மூலம் தனது மார்க்கெட்டை நிலையாக வைத்துள்ளார். அப்படி சமீபத்தில் வெளியான வட சென்னை படத்தின் சந்திரா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ஆண்ட்ரியா கலந்துகொண்டு மருத்துவமனையைத் திறந்துவைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ‘கண் சிகிச்சை வசதிகள் இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை பரவவேண்டும். அதன் மூலம் தான் பார்வையற்றோர் இழந்த தங்கள் பார்வையை மீண்டும் பெற முடியும் என்றார். 

andreya

மேலும் நானும் எனது கண்களைத் தானம் செய்துள்ளேன். எனது கண் தானத்திற்கான உத்வேகம் வேறு யாருமல்ல, உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான்’ என்று கூறியுள்ளார். 
 

இதையும் படிங்க: பண உதவி கேட்க தயங்க வேண்டாம்; மருத்துவமனை சென்று நலம் விசாரித்த விஜய்?!..