பிரபல நடிகையின் ‘கணவனைக் காணவில்லை’விளம்பரம்…கொந்தளித்த ரசிகர்கள்…

 

பிரபல நடிகையின் ‘கணவனைக் காணவில்லை’விளம்பரம்…கொந்தளித்த ரசிகர்கள்…

கமல் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் இவர் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

தனது பட பப்ளிசிட்டிக்காக ‘கணவனைக் காணவில்லை’என்று கண்ணீரும் கம்பலையுமாக முகநூலில்  வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை மீது பொதுமக்கள் போலீசில் புகார் கொடுத்துவருகின்றனர்.

asha

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத். கமல் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் இவர் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இவர் நடித்த ‘எவிடே’ என்ற படம் இன்று வெளியாகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன் காட்சியளித்த ஆஷா சரத், தனது கணவனை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவின் அடியில், இது ‘எவிடே’ படத்திற்கான விளம்பரம் என்று  அவ்வளவாக கவனம் பெறாத வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வீடியோ பார்த்தவர்கள் இதை கவனிக்கவில்லை. இதனால் அவர் கூறியது உண்மை என்று பலரும் கருதி பதட்டம் அடைந்தனர்.

asha

இதுகுறித்து முதலில்  மஜித் என்பவர்  இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘ஆஷா சரத் வெளியிட்டுள்ள வீடியோ தவறான முன் உதாரணமாகும். பார்ப்பதற்கு இது சாதாரண விஷயமாக இருந்தாலும், இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியுள்ளார். அவரது புகாரைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் தாங்களும் ஆஷாவின் வீடியோவை உண்மை என்று நம்பி மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார்களை பதிவு செய்துவருகின்றனர்.