பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த எம்எல்ஏ மகன்…அதிர்ச்சி தரும் சம்பவம்!
சஞ்சனாவை கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நடிகை சஞ்சனா. இவர் ஐதராபாத் மாதாபூரில் உள்ள பப்புக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தெலுங்கானா எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடு மகனும் பாஜக நிர்வாகியுமான ஆஷிஷ் குடிபோதையில் மது அருந்தி கொண்டு நடனம் ஆடியுள்ளார். அப்போது அங்கு வந்த சஞ்சனாவை கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சனா அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளார். இதை தொடர்ந்து அங்கிருந்து நேராக மாதாபூர் காவல் நிலையத்துக்கு சென்று ஆஷிஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் சஞ்சனாவின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் எம்எல்ஏ மகன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கைதாகி விடுவோம் என்ற அச்சத்தில் ஆஷிஷ் தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், ‘என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. என் எதிரிகள் சஞ்சனாவை பகடை காயாக பயன்படுத்துகிறார்கள். விரைவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்’ என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.