பிரபல நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதி!

 

பிரபல நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதி!

இதையறிந்த அவரது மகனும் நடிகருமான ரன்பீர் கபூர், தனது காதலி அலியாபட்டுடன் டெல்லி சென்றார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்  உடல்நல குறைவால் டெல்லி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகராக எய்ட்டிஸ் காலகட்டங்களில் வலம்வந்தவர்  ரிஷிகபூர். இவர் நடிகர் ராஜ் கபூரின் மகனாவார்.  பாபி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான ரிஷிகபூர் தன்னுடன் பல படங்களில் நடித்த நீது சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் மகன் தான் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் ரன்பீர் கபூர். 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிஷி கபூருக்கு எலும்பு மஜ்ஜையில் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதனால்  சிகிச்சைக்காக  அமெரிக்கா சென்று பல மாதங்கள் கழித்து இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் டெல்லியில் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்காகச் சென்ற அவர் அங்கு காற்று  மாசால்  தொற்று  ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் நேற்று உடனடியாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த அவரது மகனும் நடிகருமான ரன்பீர் கபூர், தனது காதலி அலியாபட்டுடன் டெல்லி சென்றார்.

இதுகுறித்து கூறிய  நடிகர் ரிஷி கபூர், காற்று மாசு காரணமாகப் பாதிக்கப்பட்டேன். தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். பயப்பட ஏதுமில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.