பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மரணம்: மேடையிலேயே சரிந்து விழுந்த பரிதாபம்!

 

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மரணம்: மேடையிலேயே சரிந்து விழுந்த பரிதாபம்!

துபாய்: பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மஞ்சுநாத் மேடையில் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

manjunatha

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் நாயுடு. இவர் துபாயில் மேடை நகைச்சுவை நாடகங்களில் நடத்துப் பிரபலமானவர். 36 வயதேயான மஞ்சுநாத் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார்.

manjunatha

அப்போது மறைந்த தனது பெற்றோர் குறித்துப் பேசி சிரித்து ரசிகர்களை உற்சாகமூட்டிய அவர், திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மேடையில் சரிந்து விழுந்தார். ஆனால் அவர் மயங்கி விழுந்ததது கூட நாடகத்தின் காட்சி நேற்று ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தான் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது தெரிந்தது.

manjunatha

மேடையில் நடித்துக் கொண்டிருந்த போதே மஞ்சுநாத் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்து விட்டது.