பிரபல தொலைக்காட்சி  நடிகை சாலை விபத்தில் பலி! 

 

பிரபல தொலைக்காட்சி  நடிகை சாலை விபத்தில் பலி! 

பிரபல தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார்.

சென்னை: பிரபல தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார்.

கன்னட தொலைக்காட்சியில்  மகலு ஜானகி என்ற தொடரில் ‘மங்களா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷோபா (45). அதுமட்டுமின்றி சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பானாசங்கரி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

actresss

அப்போது சித்ரதுர்கா அருகே அவர்கள் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார், லாரியின் மீது மோதியது. இதில் காரில் இருந்த ஷோபா உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவரின் மறைவு கன்னட தொலைக்காட்சி நடிகை, நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.