பிரபல தமிழ் நாவலை படமாக்கும் வெற்றிமாறன்!

 

பிரபல தமிழ் நாவலை படமாக்கும் வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் 4வது முறையாக தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படம் பிரபல தமிழ் நாவலை தழுவி உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் 4வது முறையாக தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படம் பிரபல தமிழ் நாவலை தழுவி உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ படங்களை தொடங்கு 4வது முறையாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி அமையவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை நடிகர் தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். இது வடசென்னையின் அடுத்த பாகம் அல்லாத புதிய திரைப்படம் என்றும் தனுஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் பூமணியின் பிரபலமான ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக அடர்த்தியாக அரசியல் பேசும் இந்த நாவலை கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படமாக்க பலரும் முயற்சித்து வந்த நிலையில், தற்போது வெற்றிமாறனும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

dhanush

இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘மாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

இதனிடையே, பெயரிடப்படாத பீரியட் படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். அத்துடன் ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.