பிரபல ஜவுளி கடையில் ஊழியர் அடித்துக்கொலை…ஈரோட்டில் பரபரப்பு?!
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான இயங்கி வருகிறது கே.கே.பி. டெக்ஸ்டைல்ஸ். இதில் இளமுருகன் வெளியூர் சென்று ஜவுளி வியாபாரிகளிடம் பண வசூல் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜவுளிக்கடை நிறுவனர் பாலுசாமி அழைப்பதாக சென்ற அவர் மறுநாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
இளமுருகன்ஜவுளிக்கடை பணத்தைக் கையாடல் செய்ததாகவும் அது தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் அடித்து கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இளமுருகன் உடலில் காயங்கள் இருந்துள்ளது. எனவே இதில் சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் பாலுசாமி மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இளமுருகன் உடலை வாங்கப் போவதில்லை என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கே.கே.பி. டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மேலாளர் உள்ளிட்ட ஆறு பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.