பிரபல சீரியல் நடிகையைத் தாக்கிய தோழி: காவல்துறையில் வழக்குப் பதிவு 

 

பிரபல சீரியல் நடிகையைத் தாக்கிய தோழி: காவல்துறையில் வழக்குப் பதிவு 

பிரபல சீரியல் தொலைக்காட்சி நடிகை நளினி நேகி தன்னுடைய தோழி தாக்கியதாக ஒஷிவரா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

மும்பை: பிரபல சீரியல் தொலைக்காட்சி நடிகை நளினி நேகி தன்னுடைய தோழி தாக்கியதாக ஒஷிவரா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

நாம்கரன் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை நளினி நேகி. இவர் ஒஷிவாரா காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,’சில வருடங்களுக்கு முன்பு நானும் எனது தோழி பிரீதியும் ஒரே அறையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தோம். பிறகு நான் தனியாக இருக்க விரும்பி வேறு வீடு பார்த்து சென்றுவிட்டேன். 

இதனையடுத்து சமீபத்தில் பிரீத்தி எனக்கு வீடு கிடைக்கவில்லை எனவே சில நாட்கள் என்னுடன் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார். நான் தங்கியிருக்கும் வீடு 2BHK என்பதால் அவர் என்னுடன் தங்கச் சம்மதித்தேன். சில நாட்கள் கழித்து பிரீத்தியின் அம்மா சினேக லதாவும் என் வீட்டில் தங்க ஆரம்பித்தார். வீடு கண்டுபிடித்து மாற தான் இங்கே தங்கியுள்ளார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து என் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தனர். 

 Nalini Negi

அதனால் ஊரிலிருந்து என்னைப் பார்க்க எனது பெற்றோர்கள் வருவதால் வீடு காலி செய்ய சொன்னேன். அதற்கு அவர்கள் சரி என ஒப்புக்கொண்டனர். பிறகு கடந்த 21ம் தேதி எனது நண்பருடன் உடற்பயிற்சி கூடத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது பிரீத்தியின் அம்மா என்னிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதை நான் பிரீதியிடம் சொன்னபோது அவள் நான் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாமல் என்னைத்  திட்ட ஆரம்பித்தார். அப்போது பிரீதியின் அம்மா கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசால் தாக்கினார். பின்னர் இருவரும் என்னை தாக்க ஆரம்பித்தனர். எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஒஷிவரா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.