பிரபல சீரியல் கதாநாயகனுடன் பிரச்சனை இல்லை ! கதாநாயகி ஓபன் டாக் !

 

பிரபல சீரியல் கதாநாயகனுடன் பிரச்சனை இல்லை ! கதாநாயகி ஓபன் டாக் !

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் எந்த பிரச்சனையும் இல்லை என முல்லை கதாபாத்திரம் ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளார்.
விஜய் டிவியில் ரசிகர்கள் அதிகம் பார்க்கும் மெகாதொடராக பாண்டியன்ஸ் ஸ்டோர் ஆகிவிட்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், என பலர் நடித்து வருகிறார்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் எந்த பிரச்சனையும் இல்லை என முல்லை கதாபாத்திரம் ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளார்.
விஜய் டிவியில் ரசிகர்கள் அதிகம் பார்க்கும் மெகாதொடராக பாண்டியன்ஸ் ஸ்டோர் ஆகிவிட்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், என பலர் நடித்து வருகிறார்கள். அண்ணன், தம்பிக்கு இடையேயான பாசப் போராட்டத்தை கதையாக எடுத்துள்ளனர். இதில் 3வது ஜோடியாக நடிக்கும் கதிர், முல்லையின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

kathiri mullai

 

இவர்கள் சீரியியலில் ஒற்றுமையாக இருந்தாலும், வெளியில் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதாக ஒரு தகவல் பரவியது. இது குறித்து சித்ரா அளித்த பேட்டியில் குமரனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் வேலையை அவர் பார்த்துக் கொள்கிறார். நான் என்னுடைய பிரச்சனையில் கவனம் செலுத்துகிறேன். நான் எதற்காக அவருடன் சண்டை போட வேண்டும். பல அவமானங்களை சந்தித்துதான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதேபோல் சீரியலில் இருந்து தான் வெளியேற போவதாக வந்த தகவலும் தவறு என சித்ரா திட்டவட்டமாக கூறியுள்ளர். எனக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. என்னுடைய கார்தான் என்னுடைய நண்பன். ஏதாவது பிரச்சனை என்றால் என்னுடைய காரில் அமர்ந்து கொண்டு அழுது புலம்பி தீர்த்துவிடுவேன். பின்னர் கஷ்டங்கள் போய்விடும் என தெரிவித்தார். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.