பிரபல சின்னதிரை நடிகை கணவர் தூக்கிட்டு தற்கொலை!

 

பிரபல சின்னதிரை நடிகை கணவர் தூக்கிட்டு தற்கொலை!

கோபிநாத்  அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேனஜராக வேலை பார்த்து வந்தார்.

சென்னை: பிரபல சின்னதிரை நடிகை ரேகாவின் கணவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சின்னதிரை நடிகை ரேகா ஜெனிபர். இவர் பல டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு கோபிநாத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோபிநாத்  அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேனஜராக வேலை பார்த்து வந்தார்.

ttn

இந்நிலையில் நேற்று முன் தினம் கிறிஸ்துமஸ் என்பதால் விடுமுறை முடிந்து நேற்று காலை அலுவலகத்தைத் திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கோபிநாத் அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த ஜெ.ஜெ.நகர் போலீசார். கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோபிநாத்துக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபிநாத்துக்கு  கடன் தொல்லையும் இருந்துள்ளது. இதனிடையே அலுவலகத்திற்கு 3 சாவிகள் இருந்த நிலையில் மன உளைச்சலால் தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கோபிநாத் அலுவலகத்தைத் திறந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.