பிரபல இசையமைப்பாளர் பாலாபாஸ்கார் மரணத்தில் திடீர் திருப்பம்! – டிரைவர் அதிர்ச்சி வாக்குமூலம்

 

பிரபல இசையமைப்பாளர் பாலாபாஸ்கார் மரணத்தில் திடீர் திருப்பம்! – டிரைவர் அதிர்ச்சி வாக்குமூலம்

பிரபல இசையமைப்பாளர் பாலாபாஸ்கரின் மரணம் தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருச்சூர்: பிரபல இசையமைப்பாளர் பாலாபாஸ்கரின் மரணம் தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் தன் குடும்பத்துடன் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றுவிட்டு திரும்பியபோது அவரது கார் விபத்தில் சிக்கியது.

அந்த விபத்தில் பாலா பாஸ்கரின் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலா பாஸ்கரும் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் மனைவியும், கார் ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அவரது கார் ஓட்டுநர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், “அன்றைய தினம் என்ன நடந்தது என்று முழுவதும் நினைவில்லை. திருச்சூரில் இருந்து கொல்லம் வரை நான் தான் காரை ஓட்டினேன். கொல்லத்தில் உள்ள ஜூஸ் கடையில் காரை நிறுத்தினோம். நான் சென்று ஜூஸ் வாங்கி வந்தேன். பிறகு பின் சீட்டில் அமர்ந்துவிட்டேன். அதற்கு பிறகு பாலபாஸ்கரே காரை ஓட்டினார். முன் இருக்கையில் அவரது மனைவியும், மகளும் அமர்ந்து இருந்தனர். அதற்கு பிறகு நடந்தது நினைவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த போலீசார், அர்ஜூனின் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.