பிரபல இசையமைப்பாளருடன் இணைந்த ‘சூப்பர் சிங்கர்’ பூவையார்

 

பிரபல இசையமைப்பாளருடன் இணைந்த ‘சூப்பர் சிங்கர்’ பூவையார்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ தொடங்கியது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற  ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ தொடங்கியது. 

poovaiyar

இதில் கலந்து கொண்ட பூவையார் கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதை வென்றார். இந்த நிகழ்ச்சியில் பூவையார்  டைட்டில் வின்னராக தேர்வாக நிலையிலும் அவருக்கு  திரைப்படங்களில்  பாடும்  வாய்ப்புகள் கிடைத்தன.  

ttn

அப்படி சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில்  படத்தில், வெறித்தனம் பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடியும், ஆடியும் அசத்தி  இருந்தார். 

இந்நிலையில்  பிகில் படத்தை அடுத்து  பூவையார் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாட இருக்கிறார்.  பூவையாருடன்  உள்ள புகைப்படத்தைத்  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆதி, இந்த சிறுவனின் மிகப்பெரிய ரசிகன் நான் என்று குறிப்பிட்டுள்ளார்.