பிரதமர் மோடி ஆடம்பர ஹோட்டலில் தங்குவதில்லை! அமித்ஷா… 

 

பிரதமர் மோடி ஆடம்பர ஹோட்டலில் தங்குவதில்லை! அமித்ஷா… 

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஆடம்பர ஹோட்டலில் தங்குவதை தவிர்த்துவிட்டு விமான நிலைய அறையிலேயே தங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், “பிரதமர் மோடி தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கண்ணியமாக கடைபிடிக்கிறார் என்றும், மிகவும் எளிமையானவர். அனைவரும் வெளிநாட்டுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அதிகபடியான பணத்தை செலவழிப்பதாக விமர்சனங்கள் எழுந்துவருகிறது.

amit shah with modi

அவர் வெளிநாட்டுக்கு செல்லும்போது அவருடன் குறைந்த அதிகாரிகளையே அழைத்து செல்கிறார். மேலும் தன்னுடன் செல்லும் அதிகாரிகள் கார்களில் செல்ல மோடி அனுமதிப்பதில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஆடம்பர ஹோட்டலில் தங்குவதை தவிர்த்துவிட்டு விமான நிலைய அறையிலேயே தங்குவார். அங்கேயே குளித்துவிட்டு ரெடி ஆகுவார்” என்றும் தெரிவித்துள்ளார்.