பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை காஜல் அகர்வால் எழுதிய மன்னிப்புக் கடிதம்…

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை காஜல் அகர்வால் எழுதிய மன்னிப்புக் கடிதம்…

பிரதமர் நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பிதழ் வந்திருந்த நிலையிலும் தன்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டு மோடிக்கே நேரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் எழுதி மன்னிப்புக்கேட்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்

பிரதமர் நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பிதழ் வந்திருந்த நிலையிலும் தன்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டு மோடிக்கே நேரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் எழுதி மன்னிப்புக்கேட்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

kajal

அக்கடிதத்தில் ,…டியர் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி சார் தங்கள் பதவியேற்பு விழாவுக்கு எனக்கும் அழப்பிதழ் கிடைக்கப்பெற்ற நிலையில் உற்சாகமும் பெருமிதமும் அடைந்தேன்.இதற்காக உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த விழாவில் கலந்துகொள்ள நான் மிக ஆர்வமுள்ளவளாகவே இருந்தேன். ஆனால் நிகழ்ச்சியில் சரியான சமயத்தில் கலந்துகொள்ள முடியாதபடி எனக்கு வந்த அழைப்பிதழ் மிகத் தாமதமாக வந்தது. இதனால் நான் பயங்கர அப்செட்டுக்கு ஆளாகிவிட்டேன்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

invitation

பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நமது சூப்பர் ஸ்டார் ரஜினி துவங்கி இந்தி நட்சதிரங்கள் கரன் ஜோகர்,கங்கனா ரனாவத்,சாஹித் கபூர், மீரா கபூர் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ் நடிகைகளில் காஜல் அகர்வால் தவிர்த்து வேறு யாருக்கும் அழைப்பு வந்ததா என்பது தெரியவில்லை.