பிரதமரை தேர்ந்தெடுக்க நாங்கள் டெல்லி சென்றுவிடுவோம்: தங்க தமிழ்ச்செல்வன்

 

பிரதமரை தேர்ந்தெடுக்க நாங்கள் டெல்லி சென்றுவிடுவோம்: தங்க தமிழ்ச்செல்வன்

கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் வரப்போகிறது, பிரதமரை தேர்ந்தெடுக்க நாங்கள் டெல்லி சென்றுவிடுமோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை: கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் வரப்போகிறது, பிரதமரை தேர்ந்தெடுக்க நாங்கள் டெல்லி சென்றுவிடுமோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனியார் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தொண்டர்கள் அதிமுக பக்கமும், குண்டர்கள் அமமுக பக்கமும் இருக்கிறார்கள் என துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் இல்லை என்பது ஊருக்கே தெரியும். ஊழலில் கொழிக்கும் அமைச்சர்களை ஓரங்கட்டிவிட்டு, கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் வரப்போகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்தத் தேர்தலுடன் நாங்கள் காணாமல் போய்விடுவோம் என்று தங்கமணி கூறுகிறார். ஆமாம், பிரதமரை தேர்ந்தெடுக்க நாங்கள் டெல்லி சென்றுவிடுமோம் என்று கூறியிருக்கிறார்.