பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்கமாட்டேன்: சிறிசேனா அதிரடி

 

பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்கமாட்டேன்: சிறிசேனா அதிரடி

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க மாட்டேன் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க மாட்டேன் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் அதிபர்  சிறிசேனாவுக்கும் ஏற்பட்ட மோதலால் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பிரதமராக ராஜபக்சேவை சிறிசேனா நியமித்தார். அதனையடுத்து இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர் எம்.பி.க்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு பலனளிக்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என சிறிசேனா கூறினார்.

இதனையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க மாட்டேன். வரும் திங்கட்கிழமை புதிய பிரதமரை நியமிக்க உள்ளேன் என்றார்.