பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகரமாக வெளியானது அதர்வாவின் 100 திரைப்படம்!

 

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகரமாக வெளியானது அதர்வாவின் 100 திரைப்படம்!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் எழுதி இயக்கியுள்ள  மூன்றாவது படம் தான் 100. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். அவுரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகிபாபு, ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

hansika

அதையொட்டி இப்படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதிருந்த நிலையில், சில பொருளாதார காரணங்களால் வெளியாகவில்லை. இதனையடுத்து இப்படம் குறித்து வழக்கு நீதிமன்றத்திலிருந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பினர் வழக்கு தொடுத்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

hansika

அதில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த படம் நேற்று மாலை தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பத்திரிகையாளர் காட்சியில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இந்த படம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.