பிரசாந்த் கிஷோர்கூட கூட்டணி வச்சதும் போதும் டீசர்ட் போடு, ஜீன்ஸ் போடுன்னு அடாடாடா

 

பிரசாந்த் கிஷோர்கூட கூட்டணி வச்சதும் போதும் டீசர்ட் போடு, ஜீன்ஸ் போடுன்னு அடாடாடா

200 சதுர அடிகொண்ட ஒருவீட்டின் பெய்யும் மழையை சேமித்தால், அவ்வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு தேவையான குடிநீரை சேமிக்கலாம்” என நல்ல விஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.

தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுகவுக்காக திட்டங்கள் வகுக்கப் போகிறார் என்று பேச்சுவார்த்தைதான் போய்கொண்டிருக்கிறது என்று பார்த்தால், ஆடி மாசத்துக்கு முந்தியே அக்ரிமெண்ட் எல்லாம் முடிந்து வேலையின் முதல் பகுதியை ஆரம்பித்துவிட்டார்கள் போல. விஷயம் என்னன்னா, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ஏதும் ஸ்கேண்டல் வீடியோவா என்றெல்லாம் கேட்காதீர்கள், NIA உங்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறது. இது நேர்மறையான வீடியோ. அதாவது, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் வேலுமணி பேசியிருக்கிறார். சரி, இதுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் சம்பந்தம் உண்டா என்றால், உண்டு. பிரசாந்த் உள்ளே வந்துவிட்டால், சம்பந்தப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் எங்கே/என்ன/எப்படி பேசவேண்டும் என்பதையும், அவர்கள் நடை உடை பாவனைகளை மாற்றுவதிலும் முக்கிய கவனம் செலுத்துவார். இங்கேயும் போதுமான கவனம் செலுத்திவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

stylish SP Velumani

வழக்கமாக தும்பைப்பூ வெள்ளை வேட்டி சட்டையில் காட்சியளிக்கும் அமைச்சர், சும்மா யூத் கணக்காக பச்சை நிற டீஷர்ட் போட்டுக்கொண்டு, தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கான பாடி லேங்குவேஜில் அசத்தியிருக்கிறார் மாண்புமிகு. சும்மா சொல்லக்கூடாது சார், சூப்பரா இருக்கீங்க. எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத், தனுஷ் சிம்புவுக்குப் பிறகு பெரும்போட்டி இருக்கப்போவது சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்டுக்கும் எஸ்.பி. வேலுமணிக்கும்தான். சரி, வீடியோவில் என்ன பேசியிருக்கிறார். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா, அண்ணன் எடப்பாடியார் புகழை எல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால், ”200 சதுர அடிகொண்ட ஒருவீட்டின் பெய்யும் மழையை சேமித்தால், அவ்வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு தேவையான குடிநீரை சேமிக்கலாம்” என நல்ல விஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்..