“பிரசவ வலிய விட வேதனைய கொடுக்கறியே” – ஒரு நர்ஸ் பண்ண வேலைய பாருங்க.

 

“பிரசவ வலிய விட வேதனைய கொடுக்கறியே” – ஒரு நர்ஸ் பண்ண வேலைய பாருங்க.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ஒரு நர்ஸ் உள்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர் .

“பிரசவ வலிய விட வேதனைய கொடுக்கறியே” – ஒரு நர்ஸ் பண்ண வேலைய பாருங்க.


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் லீலாபாய் என்ற பெண் நர்சாக வேலை பார்த்து வந்தார் .அவர் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு பிரசவத்துக்கு வரும் பெண்களின் குழந்தைகளை கடத்தி, அந்த குழந்தைகளை நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார் .
அந்த நர்ஸின் தலைமையில் ஏழு பேர் கொண்ட கூட்டம் செயல்பட்டு வந்துள்ளது .அந்த நர்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை திருடி அந்த குழந்தையை குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்று பணம் ஈட்டியுள்ளார் .அதன் பிறகு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல அங்கு பிரசவத்திற்கு வந்த ஒரு தாயின் குகுழந்தையை கடத்தியுள்ளார் .அதன் பிறகு அந்த குழந்தையையும் அதிக விலைக்கு குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்றுள்ளார் .
இந்த குழந்தை கடத்தல் பற்றி போலிஸுக்கு தகவல் தெரிந்துள்ளது .அதனால் போலீசார் ஒரு தனிப்படையை அமைத்து இந்த குழந்தை கடத்தல் கூட்டத்தை பிடிக்க வலை வீசினார்கள் .அப்போது அவர்களின் விசாரணையில் ,இந்த நர்ஸ் லீலாபாய் சிக்கினார் .போலீசார் அந்த நர்ஸை பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் .பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து குழந்தையை வாங்கிய தம்பதிகள் உள்ப்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .அதன் பிறகு குழந்தையை பெற்றெடுத்து ,பறிகொடுத்த பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள் .

“பிரசவ வலிய விட வேதனைய கொடுக்கறியே” – ஒரு நர்ஸ் பண்ண வேலைய பாருங்க.