பிரசவத்தில் தாய் இறந்ததால், குழந்தையை விற்ற சகோதரியின் கணவர்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

 

பிரசவத்தில் தாய் இறந்ததால், குழந்தையை விற்ற சகோதரியின் கணவர்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

திருமணம் ஆகாமல் கர்ப்பமான இளம்பெண் ஒருவர், பிரசவத்தின் போது உயிரிழந்ததால், பிறந்த குழந்தையை உறவினர் விற்றதாக புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. திருமணம் ஆகாத இவர் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணம் ஆகாமல் கர்ப்பமான இளம்பெண் ஒருவர், பிரசவத்தின் போது உயிரிழந்ததால், பிறந்த குழந்தையை உறவினர் விற்றதாக புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. திருமணம் ஆகாத இவர் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தகாத உறவால் கர்ப்பமான அவருக்கு, சூலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே தமிழ்செல்வி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

baby

பிரசவத்தில் தமிழ் செல்வி உயிரிழந்ததும்,தமிழ்செல்வியின் சகோதரியின் கணவர் ஆனந்தராஜ், தமிழ்செல்வியின் உடலை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி விட்டு, குழந்தையை கண்ணம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டுச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு கொண்டுச் சென்ற  அந்த குழந்தையை ராஜன்-செல்வி என்ற தம்பதிக்கு 7ஆயிரத்து 500ரூபாய்க்கு விற்று விட்டதாகவும், அந்த குழந்தையை அவர்கள் பல்லடம் அவிநாசிபாளையம் பகுதியில் வசிக்கும் உறவினர் மணிமேகலையிடம் கொடுத்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக கோவை சைல்ட் லைன் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், சூலூர் போலீசார் குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே தமிழ்செல்வி கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.