பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று : மருத்துவமனையில் இருந்து தொற்றியதாக தகவல்!

 

பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று :  மருத்துவமனையில் இருந்து தொற்றியதாக தகவல்!

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பெண் திருமணமாகி தேனியில்  உள்ள  கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பெண் திருமணமாகி தேனியில்  உள்ள  கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர்  பிரசவத்திற்காக மீண்டும்  வால்பாறைக்கு வந்துள்ளார். அங்கு உறவினர் வீட்டில் தங்கியிருந்த அந்த பெண்ணுக்கு  பிரசவ வலி ஏற்பட்டது.  இதையடுத்து பொள்ளாச்சி அரசு  மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேரக்கபட்ட அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

t

இதனிடையே பிரசவத்திற்காக வந்த மற்றொரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. இதனால் மற்ற பெண்களையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யபட்ட நிலையில்   வால்பாறை பெண்ணுக்கும் கொரோனா சோதனை செய்துவிட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

tt

இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் வால்பாறை பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அப்பெண்ணும் குழந்தையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மேலும், வால்பாறையில் பெண்ணுடன் வசித்தவர்கள், அவரைக் காண வந்த உறவினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.