பிப்.24 பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் : சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

 

பிப்.24 பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் : சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

பட்ஜெட் தொடர்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் தொடர்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அதில் குடியுரிமை சட்டத்திருத்தம், வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த உடன் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

tttn

இந்நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினம் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியே பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும் என்று சட்ட விதி 110 கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.