பித்தளை வாளுடன் தியேட்டரில் வலம் வந்த தனுஷ் ரசிகர் கைது!

 

பித்தளை வாளுடன் தியேட்டரில் வலம் வந்த தனுஷ் ரசிகர் கைது!

கண்ட பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அந்த இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். 

நெல்லையில் சினிமா திரையரங்குக்கு வரவிருந்த நடிகர் தனுஷை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்திருந்த கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ரசிகர் ஒருவர் பித்தளை வாள் கொண்டுவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ttn

நடிகர் தனுஷ் நடிக்கும் 40-வது திரைப்படமான ஜகமே தந்திரம் படத்தில்  மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பலபகுதிகளிருந்தும் தனுஷ் ரசிகர்கள் குவிய தொடங்கினர். ஆனால்  தனுஷ் வரவில்லை. இதனால் ரசிகர்களே கேக் வெட்டி விழாவை நடத்த ஆரம்பித்தனர். அப்போது கேக் வெட்டுவதற்காக ஒரு ரசிகர் வாள் வைத்திருந்தார். இதை கண்ட பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அந்த இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். 

rrn

 விசாரணையில் வாள்  வைத்திருந்த இளைஞர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுள்ளான் செந்தில் என்பது தெரியவந்தது.  சுள்ளான் செந்தில் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த பித்தளை வாள்  பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.